Wednesday, July 16, 2008

ஒளி சுடர்ந்த என் மனமும்நெருப்பெரித்த உன் மனமும்


எஸ்போஸ்:கவிதைகள்

I

தயக்கத்தினூடே நிகழும் வார்த்தைக்கணத்தில்உன்னுடன் பேசாத நூறு சொற்கள் எழுதித்தீர்ந்தனமனதில்நாங்களோஎமக்கு எப்போதோ பரிச்சயமான ஒற்றைச்சொல்லில்மூன்று நிமிடங்கள் பேசினோம்
அறையின் சுவரில்இரைக்காக அலைந்து கொண்டிருந்தது பல்லியுகங்களுக்கப்பாலான கவிதையொன்றுலட்சக்கணக்கான கிறுக்கல்களினடியில் உறைந்துபோயிற்றுபூக்கள் உதிர்ந்து காற்றில் மிதக்கின்றனகாற்றோ முற்றத்தை அள்ளிச் செல்கிறது
வானம் நீலநிறமாயிருக்கிறதென்று நானும்அதே நீலம்பரவசங்களால் ஆகர்ஸிக்கப்பட்டிருக்கிறதென்று நீயும்ஒருவருக்கொருவர் எண்ணக்கூடும்எனினுமென்னமனதில் எழுதிய சொற்களோ இந்தக்கணம் வரைஎந்த உருவமுமற்றுப்போயின நிழலில் கரைந்து

II

உனது முகம் பற்றிய படிமம்உனது புன்னகையாய் - வண்ணத்துப்பூச்சியொன்றின்சிறகைப்போல – என்னுள் படபடக்கிறது
இருவருமே தெரிந்துவைத்திருக்காத நாளொன்றில்எப்போதோ பரிச்சயமான ஒற்றைச்சொல்லில் நாங்கள்பேசக்கூடும் மீண்டும்காற்று அதில் எந்த வார்த்தையையும்வானை நோக்கி இழுத்துச்செல்லாதிருந்தால்மனமிடை எழுதிய சொற்களில் ஒன்றையேனும்உன்னை நோக்கி வீசவே விரும்புவேன்மௌனம் சிதறியுடையும் அக்கணத்தில்எனது சொற்களோதேவதைகள் வாழ்ந்துபோன வனம்போலபூத்திருக்கும் உன்னுள்

நன்றி- காலச்சுவடு

இதழ்-29 ஏப் - ஜூன் 2000