tag:blogger.com,1999:blog-26760215944540215432024-03-08T05:44:31.001-08:00நிலம்அதிகாரங்களுக்கு எதிரான நமது இருதயங்களைச் சிலுவையில் அறைவதா?நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-33648825157212214632008-08-19T23:48:00.000-07:002008-08-19T23:53:37.062-07:00கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு<span style="font-size:130%;color:#ff0000;"><strong>எஸ்போஸ்</strong></span><br /><br />கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு<br />மழைக்காலம் தொடங்கிவிட்டது;<br />ஈசல்கள் பறக்கின்றன.<br />நண்பர்களே!<br />இருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,<br />இன்னும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்<br />எமது கண்களை நோக்கி வருகின்றன.<br />ஈசல்கள்<br />இறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.<br />காற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:<br />தவளைகள் ஏன் ஒலியெழுப்பவில்லை?<br />ஒளியற்ற இந்த இரவினுள்<br />சித்திரவதைகளால் எழும் கூக்குரல்கள்<br />மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.<br />தலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்<br />ஈசல்கள் ஊர்கின்றன.<br />நாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்<br />தேவாலயங்களில்<br />கடவுளின் இரத்தத்தைக் குடித்தோம்;<br />அவர்தம் சரீரத்தைப் புசித்தோம்,<br />எவ்வளவு சந்தோசமானது<br />கடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்!<br />எனினும் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.<br />நண்பர்களே!<br />சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே<br />மழைக்காலம் தொடங்கிவிட்டது<br />கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்<br />நாம் என்ன செய்ய!<br />அவர்களே எம்மைப் பணித்தனர்<br />இரத்தத்தைக் குடிக்குமாறும்<br />சரீரத்தைப் புசிக்குமாறும்.<br />இன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்<br />சரீரத்தைப் புசித்ததன் பேரிலும்<br />அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு<br />நீங்களே உணர்வீர்கள்,<br />அவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத<br />உங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென<br />முன்வினைச் செயலும்<br />கடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்<br />உங்களைக் காப்பாற்றிவிட்டதென.<br />அதன் நிமித்தம்,<br />குருதிச் சிதறல்களும்<br />கைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்<br />காதல்களையும்<br />பெற்றோர்களையும்<br />மனைவியரையும்<br />பிள்ளைகளையும்<br />எழுதிய சொற்களால் நிறைந்த<br />உயர்ந்த மிகப் பழஞ்சுவர்களையுமுடைய<br />ஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்<br />நீங்கள் தப்பிவிட்டீர்கள்.<br />எனினும் நாம் காண்கிறோம்,<br />இரவை அள்ளிச் செல்லும்<br />எமது ஓலத்தின் அடியிலிருந்து<br />நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்<br />அவர்தம் சரீரத்தைப் புசிக்கவும்<br />ஆன ஒரு நாளை.<br />ஈசல்கள் எமது விழிகளை முறித்து<br />தமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.<br />எனினும் நாம் காண்கின்றோம்,<br />நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்<br />அவர்தம் இருதயத்தைப் புசிக்கவும்<br />ஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-45768095444249848012008-08-02T00:55:00.000-07:002008-08-02T00:57:38.068-07:00<span style="color:#ff0000;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்</strong></span><br /><span style="color:#ff0000;"><strong></strong></span><br /><br />அழகிய இரவுபற்றிய எனது கவிதைகளில்<br />எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன<br />மிருகங்கள் பற்றிய அச்சத்தால் அழுகிச்சிதைந்தது நிலவு<br />நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்<br />நான் இழந்தேன்<br /><br />எனது கவிதைகளின் காதலையோ<br />மனச் சுவர்களில் அவை புணரும் காட்சிகளையோ<br />அவற்றின் அந்தரங்களையோ<br />வெறியோடு தின்னுகின்றன மிருகங்கள்<br /><br />துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின்<br />எல்லையற்ற விதி பற்றியும்<br />மிருகங்களுடனான அவனது வாழ்வு பற்றியும்<br />இன்றைய கவிதையை காற்றுத்தானும் எழுதவில்லை<br /><br />எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய<br />கவிதைகளின்<br />பிரேதநதி இழுத்துச் சென்று விட்டது<br /><br />நூறு தடவைகளுக்கு மேல் நிகழ்ந்தது எனது இறப்பு<br />நான் இறந்தேன் மீண்டும் மீண்டும்<br />நூறு தடவைகளுக்கு மேல்<br />மிருகங்கள் உடலைத் தின்னுகின்றன<br />கவிதைகளற்ற உடலை உயிரற்ற உடலைநிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-19282839693822773162008-07-16T02:58:00.000-07:002008-07-16T03:15:06.920-07:00ஒளி சுடர்ந்த என் மனமும்நெருப்பெரித்த உன் மனமும்<span style="color:#99ff99;"></span><br /><span style="color:#ff0000;">எஸ்போஸ்:கவிதைகள்</span><br /><br />I<br /><br />தயக்கத்தினூடே நிகழும் வார்த்தைக்கணத்தில்உன்னுடன் பேசாத நூறு சொற்கள் எழுதித்தீர்ந்தனமனதில்நாங்களோஎமக்கு எப்போதோ பரிச்சயமான ஒற்றைச்சொல்லில்மூன்று நிமிடங்கள் பேசினோம்<br />அறையின் சுவரில்இரைக்காக அலைந்து கொண்டிருந்தது பல்லியுகங்களுக்கப்பாலான கவிதையொன்றுலட்சக்கணக்கான கிறுக்கல்களினடியில் உறைந்துபோயிற்றுபூக்கள் உதிர்ந்து காற்றில் மிதக்கின்றனகாற்றோ முற்றத்தை அள்ளிச் செல்கிறது<br />வானம் நீலநிறமாயிருக்கிறதென்று நானும்அதே நீலம்பரவசங்களால் ஆகர்ஸிக்கப்பட்டிருக்கிறதென்று நீயும்ஒருவருக்கொருவர் எண்ணக்கூடும்எனினுமென்னமனதில் எழுதிய சொற்களோ இந்தக்கணம் வரைஎந்த உருவமுமற்றுப்போயின நிழலில் கரைந்து<br /><br />II<br /><br />உனது முகம் பற்றிய படிமம்உனது புன்னகையாய் - வண்ணத்துப்பூச்சியொன்றின்சிறகைப்போல – என்னுள் படபடக்கிறது<br />இருவருமே தெரிந்துவைத்திருக்காத நாளொன்றில்எப்போதோ பரிச்சயமான ஒற்றைச்சொல்லில் நாங்கள்பேசக்கூடும் மீண்டும்காற்று அதில் எந்த வார்த்தையையும்வானை நோக்கி இழுத்துச்செல்லாதிருந்தால்மனமிடை எழுதிய சொற்களில் ஒன்றையேனும்உன்னை நோக்கி வீசவே விரும்புவேன்மௌனம் சிதறியுடையும் அக்கணத்தில்எனது சொற்களோதேவதைகள் வாழ்ந்துபோன வனம்போலபூத்திருக்கும் உன்னுள்<br /><br />நன்றி- காலச்சுவடு<br /><br />இதழ்-29 ஏப் - ஜூன் 2000நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-66665063135829942452008-06-23T01:28:00.001-07:002008-06-23T01:34:50.137-07:00மூளும் தீயும் நீளும் குரலும்<span style="font-size:130%;color:#ff6600;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்</strong></span><br /><br /><br /><span style="color:#33cc00;"><span style="font-size:130%;"><strong>கவிதை 01</strong></span><br /></span>துப்பாக்கி வேட்டொலிகளுக்குள்ளும்<br />சப்பாத்த மிதியடிகளுக்குள்ளம்<br />சிதைவுறும்<br />எமக்கான கனவுகளனைத்தும்.<br />எம் ஒவ்வொருவரினதும் இருப்பும்<br />ஏதாவது ஒரு தெருக்கோடியிலோ<br />தொலைதூரக் காடுகளிலோ அல்லது அதற்கப்பால்<br />வனந்தர வெளிகளிலோ<br />நிலைகொண்டிருக்கும்.<br />ஒரு நிலவு காலத்தில்<br />அல்லது முகங்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ள முடியாத<br />துயர் மிகுந்த கரிய இருளில்<br />நிழலாம் எமக்கான சந்திப்பகள்.<br />நாம் காதலர்களாகவும்<br />பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளாகவும்<br />குழந்தைகளைப் பிரிந்த தாய் தந்தையராகவும்<br />கணவன் மனைவியராகவும் இருக்கிறோம்.<br />உனக்கு எப்போதுமே சந்தோசமளித்திருக்கமுடியாது<br />இளமைக்காலம் பற்றி நீயும்<br />பனியடர்ந்த காடுகளுக்குள் வாழும்<br />எனது இளமைக்காலம் பற்றி நானும்<br />எண்ணிப் பார்க்க முயல்வோம்<br />கணங்களில் அல்லது அதைவிட குறைவான நேரத்தில்.<br />மீளவும் சப்பாத்தக்களின் ஒலி நிலத்தில் அதிர்கிறது.<br />சகீ….<br />எமக்கான ஒவ்வொன்றின் முடிவிலும்<br />நாளை பற்றிய எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும்<br />தவிர<br />வேறு என்னதான் இருக்கிறது சொல்.<br />--------------------------------------------------------<br />06 பெப்ரவரி 97<br />-போஸ்நிஹாலே<br /><br /><span style="font-size:130%;color:#33cc00;"><strong></strong></span><br /><span style="font-size:130%;color:#33cc00;"><strong>கவிதை 02</strong></span><br /><br />பூமியின் ஒளி பொருந்திய முகங்கள்<br />குழந்தைகளினுடையவை.<br />துயரம் தரும்<br />கனவுகளையும்<br />எமது காலங்களையும் அழித்துவிட்டு- எமது காலங்கள் நெருப்பில்<br />உழல்பவை<br />குழந்தைகளுக்கானதை அவர்களிடமே கையளிப்போம்.<br />நம்பிக்கைதரும் ஒரு சூரியனை<br />அல்லது ஒரு பௌர்ணமியை<br />மிக மெல்லிய வாசனையையும் இதழ்களையும் உடைய<br />மல்லிகை மலர்களை<br />நாங்கள் அவர்களுக்காய் பரிசளிப்போம்.<br />கந்தக நாற்றம் எமது இருதயங்களில் உறைந்து விட்டதைப்போல<br />பிரிவின் துயரங்களும்<br />மன அழுத்தங்களும்<br />எமது வேர்களை அரித்து தின்று விட்டதைப் போல<br />அவர்களுடைய இருதயங்களை<br />அவை தின்றுவிட அனுமதிக்க முடியாது எம்மால்<br />உண்மையில்<br />நாம்<br />இழந்த சந்தோசங்களை<br />அவர்களின் மூலம் மீட்கும் கனவுகளில் வாழ்கிறோம் எனில்<br />அவர்களின் குதூகலங்களும் சிரிப்பும்<br />எமக்குச் சொந்தமானவை எனில்<br />பூமியின் ஒளி பொருந்திய முகங்களை<br />அவர்களிடம் பரிசளிப்போம்.<br />----------------------------------------<br />98 கார்த்திகை 04<br />-போஸ்நிஹாலே<br />சரிநிகர் இதழ் 165<br />-------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-50197160880358936452008-06-23T01:28:00.000-07:002008-06-23T01:35:15.314-07:00சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்<span style="font-size:130%;color:#cc0000;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்<br /></strong></span><br /><br />உன்னை அவர்கள் கைது செய்து<br /><br />எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்<br /><br />எனது குழந்தைக்குப் பிடித்தமான<br /><br />உனது "சேட் கொலரின்" மடமடப்புச் சத்தம்<br /><br />இன்னும் அவனுடைய விரலிடுககுகளில்<br /><br />கேட்டுக் கொண்டேயிருக்கிறது.<br /><br />அவர்கள் வாகனங்களோடு<br /><br />நட்சத்திரங்களோ ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்<br /><br />சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்<br /><br />கொண்டு வைத்திருந்தார்கள்<br /><br />அது<br /><br />இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்<br /><br />எனது குழந்தையின் கண்களில்<br /><br />எங்களுடனேயே தங்கியிருக்கிறது.<br /><br />அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்<br /><br />நீண்ட கூரிய ஆயுதங்களால் தாங்கவும்<br /><br />கொல்லவுங் கூடமுடியும்.<br /><br />அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை<br /><br />அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்<br /><br />சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்<br /><br />நிரூபித்து விட்டது …<br /><br />நிரூபித்து விட்டது…<br /><br />நம்பிக்கை கொள்<br /><br />நீ பேசாதிருக்கும் வரை<br /><br />உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை<br /><br />அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே<br /><br />சிறைக் கம்பியிடுக்குகளின் வழி<br /><br />ரோஜாப் பூக்களின் வாசனையும்<br /><br />வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்<br /><br />உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்<br /><br />நம்பிக்கை கொள்<br /><br />நீ பேசாதிருக்கும் வரை<br /><br />அவர்கள் தோற்றுப போவார்கள்<br /><br />நிரந்தரமாகவே<br /><br />------------------------<br />போஸ்நிஹாலே<br /><br />கிளிநொச்சி<br /><br />சரிநிகர் இதழ் 170<br />----------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-53206492751727667752008-06-23T01:25:00.000-07:002008-06-23T01:35:39.704-07:00பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல்<span style="color:#ff0000;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்</strong></span><br /><br />அழிவு காலத்தில் நீ புலம்பித் தீர்க்கிறாய்<br />என்றாலும்<br />கண்களைக் குருடாக்கிக் கொண்டு<br />நிலவையும் நட்சத்திரங்களையும்<br />தனது தீராத வலியால் அணைத்தபடி<br />அழிவுகாலம் தொடர்கிறது<br />உனக்கும் எனக்குமாக நாங்கள் விதைத்த<br />நெல்மணிகளை<br />உனக்கு மட்டுமே பூர்விகமான குடிசையை<br />நூறு வருடங்களின் பின்பும் எஞ்சியிருந்த மிகப் பழைய<br />தங்க வளையல்களை<br />தீராத எல்லைச் சண்டையில்<br />யாருக்குமற்றிருந்த நிலத்துண்டை;<br />எல்லாவற்றையும் நாங்கள் இழந்தோம்<br />நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும்<br />அழிவின் துயரம் வன்மத்தோடிருக்கிறது<br />யாருக்குத் தெரியும்<br />நீ வாழ்ந்து கொண்டிருந்த கடவுளரின் நம்பிக்கை<br />உன்னைச் சபித்துவிடுமென்று<br />நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா?<br />இப்படியொரு சாபக்கேட்டை<br />உனது குழந்தைகளுக்கு<br />நினைவுறுத்த வேண்டியிருக்குமென்று,<br />என்றாலும் அது நடந்தே விட்டது; நடந்தே விட்டது;<br />அவர்கள் வந்து விட்டார்கள்<br />நீயே சொல்<br />சாத்தானின் தோட்டத்தில்<br />தப்பிப் பிழைத்தலற்று வாழ்தல்<br />சாத்தியமா?<br /><br />--------------------------<br />05.08.1999<br />மூன்றாவது மனிதன் ஜனவரி - மார்ச்<br />-------------------------------------------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-23788040043101182442008-06-19T02:12:00.000-07:002008-06-19T02:46:36.526-07:00விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு<span style="font-size:130%;color:#cc0000;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்</strong></span><br /><br />-----------------------------------------------------------<br />நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்<br />உனது தோள்களில்<br />தோட்டாக் கோர்வைகளும் பதவிப் பட்டிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன<br />கண்மூடித்தனமாய்<br />உன்னை நான் எப்படி வர்ணிப்பது<br />என்னிலிருந்து அஞ்சித் தெறிக்கின்றன சொற்கள்<br />மழிக்கப்பட்ட உனது முகத்தில்<br />ஈ கூட உட்கார அஞ்சுகிறது<br />உனது வரவைக் குறித்து<br />யாரும் மதுக்கிண்ணங்களை உயர்த்தவில்லையாயினும்<br />துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்<br />நீயே உனது வெற்றியைச் சொல்லியபடி<br /><br /><br />இருண்ட காலத்தின் இதே குரலில் பாடிய<br />துரதிர்ஷ்டம் மிக்க பாடல்களனைத்தையும்<br />மணல் மூடிற்று… நேற்றிரவு அதன் கோரைப் புற்களின் மிகச் சிறிய<br />முளைகளை நான் கண்டேன்<br />நெஞ்சில் மிதித்தபடியாய் பீரங்கி வண்டிகள் நகர்கின்றன<br />கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட்ட<br />பழைய நகரங்களையும் நோக்கி<br />எனது விரல்கள், எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்<br />உனது விழியில் நடுங்குகின்றன<br />நீயோ சொற்களாலும் துப்பாக்கியாலும்<br />எனது மனிதர்களின் நெஞ்சுக் கூட்டில் ஓங்கி அடிக்கிறாய்<br />என்னிடமோ<br />உனது நெஞ்சு வெடித்துச் சிதறம்படியாய்<br />அடித்துச் சாய்ப்பதற்கு எதுவுமேயில்லை<br />எனினும்<br />துடிக்கும் எனது கைகளால் ஓங்கியொரு அறை விடவே விரும்புறேன்<br />உனது கன்னத்தில்<br />விலங்கிடப்பட்ட எனது கணத்தில், நீ துப்பாக்கி இழுத்துக் கொண்டு<br />நடந்து வருகிறாய்<br /><br />யாரோ சொன்னார்கள்<br />அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி<br />பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்<br />சீருடையைக் கிழித்து வீசு<br />ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக<br />உழைக்கவும்<br />தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்<br />உன்னைப் போலவே மாற்று அவனை<br />அல்லது நானுனக்குச் சொல்கிறேன்<br />அவனது துப்பாக்கி உன்னை நோக்கியிருக்காத தருணத்தில்<br />அந்தச் சனியனை<br />கணத்தில், அவன் எதிர்பார்க்காத கணத்தில்<br />அவனை நோக்கித் திருப்பு<br />உனக்கு முன்னரே அவனது குடலிற் புதையும் அவனது உயிர்<br />நீ அஞ்சாதே<br />உன்னை அவர்கள் கொல்வார்கள்<br />நிச்சயமாக நீயே அதை உணர்வாய்<br />அப்பரிசு<br />நிச்சயமற்ற உனது காலத்தில்<br />எப்போதாவது உனக்குக் கிடைக்கத்தான் போகிறது<br />வசத்தால், நீ தந்தையென்பதை அவர்கள் மறுத்ததைப்போலவே<br />நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய் என்பதையும், அவள் உனக்காகவே<br />வாழ்கிறாள் என்பதையும்<br />அவர்கள் மறுத்ததைப் போலவே<br />உனது தாயின் கண்ணீரை, அவர்கள் துப்பாக்கியின் நெருப்பில்<br />காய்ச்சியதைப் போலவே<br />நீயும் அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு, சாகும் தருணத்தில்<br />நான் நினைக்கிறேன்<br />இந்த யுகத்தின், சிறையில் இருப்பதும்<br />செத்துப் போவதும் ஒன்றுதான்<br />உழுத வயல்களே<br />முளைக்கப் போடப்படாத தானியங்களே<br />வாழ்வளித்த பன்னெடுங் காலத்தின் நிழலே<br />சொல்<br />துப்பாக்கியின் செதுக்கப்பட்ட சிற்பங்களை<br />உன்னில் நட்டு வைத்தது யார்?<br />நட்டு வைத்தது யார்?<br />ஆவர்களை நோக்கி<br />விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே<br />மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில்<br />யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க<br />எங்களின் குதிரைகளைக் கொன்று<br />அவர்களின் தேவதைகளைக் கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்<br /><br />அவர்களோ சிலுவைகளையும் முள் முடிகளையும் எறிந்தார்கள்<br />நாங்கள் எழுதிய கவிதைகளில் தீப்பந்தங்களைச் செருகினார்கள்<br />எமது விழிகள் வரைந்த ஓவியங்களோ<br />இரவின் காட்சிகளாய் ஒளிமங்கிப் போயின<br />அவர்கள் தமது குதிரைகளோடு<br />எமது தேர்ப்பாதைகளெங்கும்<br />வெறிபிடித்தலைந்தார்கள்<br />கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை<br />நாங்கள் இழந்தோம்<br /><br />தெருவின் இருளை இடறும் குடிகாரப் பெண்ணொருத்தியின்<br />பேச்சில் கிறங்கி<br />இன்னொரு கூட்டம்<br />இதே தெருவில் துணியவிழக் கிடக்கிறது<br />வெட்கித் தலைகுனியும் நீ<br />போய்விடு<br />புழுதியில் செத்த ஒளியின் சிறகுகளைத் தேடியாவது<br />நீ போய்விடு<br /><br />போஸ் நிஹாலே.<br />18.11.1999<br />--------------------------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-82229520359946147152008-06-19T02:11:00.000-07:002008-06-19T02:46:05.563-07:00சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்<span style="font-size:130%;color:#cc0000;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்</strong></span><br />---------------------------------------<br /><br />உன்னை அவர்கள் கைது செய்து<br />எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்<br />எனது குழந்தைக்குப் பிடித்தமான<br />உனது 'சேட் கொலரின்' மடமடப்புச் சத்தம்<br />இன்னும் அவனது விரலிடுக்குகளில்<br />கேட்டுக் கொண்டேயிருக்கிறது<br />அவர்கள் வாகனங்களோடு<br />நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்<br />சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்<br />கொண்டு வந்திருந்தார்கள்<br />அது<br />இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்<br />எனது குழந்தையின் கண்களில்<br />எங்களுடனேயே தங்கியிருக்கிறது<br />அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்<br />நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும்<br />கொல்லவுங் கூட முடியும்<br />அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை<br />அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்<br />சப்பாத்துக்களில் ப+சப்பட்ட குருதியும்<br />நிரூபித்து விட்டது…<br />நிரூபித்து விட்டது…<br />நம்பிக்கை கொள்<br />நீ பேசாதிருக்கும் வரை<br />உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை<br />அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே<br />சிறைக் கம்பியிடுக்குகளின் வழி<br />ரோஜாப் ப+க்களின் வாசனையும்<br />வுண்ணத்துப் ப+ச்சிகளின் சிறகுகளும்<br />உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்<br />நம்பிக்கை கொள்<br />நீ பேசாதிருக்கும் வரை<br />அவர்கள் தோற்றுப் போவார்கள்<br />நிரந்தரமாகவே.<br />------------------------------<br />போஸ்நிஹாலே<br />------------------------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-53211147195584621212008-06-19T02:09:00.000-07:002008-06-19T02:48:09.233-07:00அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்<span style="font-size:130%;color:#ff0000;"><strong>கருணாகரன் </strong></span><br />-------------------------------------------<br /><br />'அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார்.<br />அப்போது அவர் ' நிலம்' என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. அந்தக்குறையும் கவலையும் அவரிடமிருந்தது. அதற்குப்பதிலாக இப்போது உயிர் நிழலை வெளியிட முயன்றார்.<br /><br />"அந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு இதழ் பிரான்ஸிலிருந்து வருகிறதே" என்று கேட்டேன்.<br />"அதனாலென்ன " என்று என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் எஸ்போஸ்.<br />"ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு இதழ் வந்துகொண்டிருக்கும் போது அதே பெயரில் இன்னொரு இதழ் சமகாலத்திலேயே வெளிவருவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா. தவிர ஏற்கனவே அந்தப்பெயரில் இதழைக்கொண்டுவருபவர்கள் ஏதாவது சொல்லக்கூடுமே" என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன்.<br /><br />"பெயரில் என்ன இருக்கிறது" என்றார் எஸ்போஸ்.<br /><br />பசுவய்யாவின் ஒரு கவிதையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்று ஒரு அடி வரும். எனக்கு அந்தக்கவிதைதான் அப்போது நினைவில் வந்தது.<br /><br />வந்தவரின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்க, பெயரில் என்ன இருக்கிறது என்றபடி அவன் அதைச்சொல்லாமல் போகிறான்.<br /><br />பத்தாண்டுகளுக்கு முன் இந்தக்கவிதையைப்பற்றி எஸ்போசுடன் பேசியிருக்கிறேன்.<br /><br />சற்று நேர அமைதிக்குப்பிறகு "ஏன் வேறு பெயரொன்றைத்தெரிவு செய்யலாமே" என்றேன். அவர் அதற்குப்பதிலேதும் சொல்லவில்லை.<br /><br />அன்றிரவு நீண்ட நேரம் புதிய இதழ்பற்றி ஆர்வத்தோடு பேசினார். ஒரு புதிய இதழுக்கான தேவை, அதைக்கொண்டுவருவதற்கான சாதக பாதக அம்சங்கள், ஏற்கனவே வெளிவந்த இதழ்களின் நிலைமை எனப்பலவற்றையும் பேசினோம். மிகச்சீரியஸாகவே அவர் பேசிக்கொண்டிருந்தார்.<br /><br />எஸ்போஸின் இயல்பே அப்படித்தான். எப்போதும் எல்லாவற்றையும் மிகச்சீரியஸாகவே எடுக்கும் ஆள் அவர். எல்லாவற்றிலும் அவர் கொள்ளும் தீவிரம்தான் இதற்குக்காரணம் என நினைக்கிறேன். அதேவேளை அவர் அதேயளவுக்கு எல்லாவற்றிலும் கடுமையான அலட்சியத்தையுமுடையவர். எதிலும்; பொறுப்பற்ற விதமாக அவர் நடந்து கொள்வதாகவே தோன்றும். 'விறுத்தாப்பி' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிலும் அலட்சியம். எதிலும் எதிர்நிலை. தன்னிச்சையாக இயங்குவதில் அவர் தனக்கான ஒரு வகைமாதிரியை உருவாக்கியிருந்தார். அவ்வாறு உருவாக்கிய அந்த வெளியில்தான் அவர் இயங்கிவந்தார்.<br /><br />எந்தத்திட்டங்களுக்கும் வரையறைகளுக்குள்ளும் ஒழுங்குமுறைகளுக்குள்ளும் நிற்கும் இயல்பற்றவர் எஸ்போஸ். இதனால் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடத்திலேயே கடுமையான கண்டனங்களுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானவர். ஆனால் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதுதான் அவருடைய பலம். அதுதான் அவரை பலரிடத்திலும் ஆழமாக நேசிக்கவைத்தது.<br /><br />அவர் எல்லோருடனும் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் பகைமை கொண்டதில்லை. பலநாட்கள் எங்களின் வீட்டில் பெரும் மோதலே ஏற்பட்டிருக்கிறது.<br /><br />"இலக்கியத்தையும் அரசியலையும் விட்டிட்டு வேற எதைப்பற்றியாவது கதையுங்கள்" என்று வீட்டில் சொல்வார்கள். அந்தளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் வேறுநண்பர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டிலும் யாருக்கும் அவர்மீது கோபம் வந்ததில்லை. பழகும் எல்லா வீடுகளிலும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவார். மிகச்சரியாகச்சொன்னால் அவரின்மீது எல்லோருக்கும் ஒருவிதமான அன்பும் இரக்கமும் கருணையும் பரிவும் இருந்தது. அவருடைய தோற்றமும் அலைந்த வாழ்வும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம். எல்லோரும் அவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே கருதினார்கள்.<br /><br />அவருடன் நாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சடுதியாக கிளம்பிப்போய்விடுவார். பிறகு ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் திடுதிப்பென வந்து முன்னே நிற்பார். அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் பிரச்சினை. அவருடைய இந்தமாதிரியான நடவடிக்கைகளினால் அவர் மற்றவர்களால் புரிந்து கொள்ளக் கடினமானவராக இருந்தார்.<br /><br />அடுத்த கணத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அவருடைய படைப்புகளிலும் இந்த இயல்புகள் காணப்படுகின்றன. தீவிரம் அலட்சியம் என்ற இருநிலைகளுக்கிடையில் சஞ்சரிக்கின்ற அல்லது அலைகின்ற மனதைப் பிரதிபலிக்கின்ற எழுத்து அவருடையது.<br /><br />எஸ்போஸின் வாழ்வும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அவர் தன்னுடைய இளைய வயதிலேயே நிலையற்று அங்குமிங்குமாக அலைந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தார். தாயுடனும் பாட்டியுடனும் வாழந்த காலத்திலேயே அவருள் இந்த எதிர்நிலையம்சம் காணப்பட்டது. பள்ளியிலும் அவர் வேறபட்ட தன்மையிலேயே இருந்தார் என்று அவருடைய இளவயது நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். அநேகமாக ஆசிரியர்களுடன் அவர் அடிக்கடி பிரச்சினைப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.<br /><br />இதுபற்றி பின்னாளில் அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா என்று கேட்டார். அந்தளவுக்கு எங்களின் மனதில் ஆசிரியரைப்பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாரத்தை திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி என்பது அவருடைய நிலைப்பாடு.<br /><br />பிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே என்றொரு நண்பார் சொன்னார். எஸ்போஸ் சிரித்தார். இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச்சிரிப்பின் அர்த்தம். அதுவும் படித்த மனிதர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களையே சட்டம் போட்டுத்தான் கட்டுப்படுத்த வேணுமா என்றமாதிரி இருந்தது அவருடைய மௌனம்.<br /><br />அவர் பள்ளியில் நிறையத் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த வடு அவரின் ஆழ்மனதில் பதியமாகியிருந்ததை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் இளவயதின் பல வடுக்களிருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் கடந்து அவரிடம் அசாத்தியமான திறமைகள் வளர்ந்திருந்தன. அது பள்ளிகள் காணாத ஆற்றல். நம்முடைய எந்தப்பள்ளியும் கண்டடைய முடியாத திறன். அதனாலென்ன, கவனங்கொள்ளாமல் விடப்பட்ட அவருடைய படைப்புகளில் கூர்மையும் தீவிரமும் கூடிய ஆழமிருந்தது. நவீனமிருந்தது.<br /><br />எஸ்போஸ் தன்னுடைய இளையவயதிற்குள் அதிகமாக வாசித்தார். காஃகாவும் காம்யுவும் ஆரம்பத்தில்; அவருக்குப்பிடித்திருந்தனர். பிறகு அவர் பின்நவீனத்துவ எழுத்துகளில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கி, மார்க்வெஸ் போன்றோரின் எழுத்துகளை அதிகம் விரும்பிப்படித்தார்.<br /><br />தமிழில் அவருக்குப்பிடித்த படைப்பாளிகள் ஜி.நாகராஜன், சாருநிவேதிதா, கோணங்கி, விக்ரமாதித்யன், ஜெயமோகன், சல்மா, மனுஷ்யபுத்திரன் போன்ற சிலர். பிரமிளை அவர் அதிகம் நேசித்தார். பிரமிளின்மீது ஒருவகைப்பித்து நிலை எஸ்போசுக்கிருந்தது. இவர்களின் எழுத்துகளை அவர் அதிகமாக விரும்பிப்படித்தார். ஈழத்தில் திசேரா, ரஞ்சகுமார், உமா வரதராஜன், அனார், பா.அகிலன், நிலாந்தன், சோலைக்கிளி, சு.வி ஆகியோரின் எழுத்துகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது.<br /><br />என்றாலும் எஸ்போஸ் பின் நவீனத்துவ எழுத்துகளையே தேடிக்கொண்டிருந்தார். எம்.ஜி. சுரேஷின் புத்தகங்களை எப்டியோ எங்கோ கண்டு வாங்கிக்கொண்டு ஒருநாள் திடீரென வந்தார். இரண்டு நாட்கள் வீட்டில் தங்கி நின்று இரவு பகலாக வாசித்தார்.<br /><br />வாசித்து ஓயும் பொழுதுகளில் பேசத்தொடங்குவார். பேச்சு ஏதோ ஓர் புள்ளியில் விவாதமாகும். விவாதம் உச்சநிலைக்குப்போகும்போது, தான் மீண்டும் புத்தகத்தை வாசிக்கப்போவதாக கூறிச்சென்று விடுவார்.<br /><br />மூன்றாவது நாள் நான்கு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தேடிவந்த நண்பர்கள் திரண்டிருக்க முழு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி ஒரு அழியக்கூடாத சித்திரம்.<br /><br />அவரின் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகளை எஸ்போஸ் இந்தக்கலவையில், இந்தப்பண்பில்தான்- பின்நவீனத்துவப் பண்பில் எழுதினார். 'செம்மணி ' என்ற கவிதைத் தொகுதியில் இப்படி ஒரு கவிதையைத் தொடக்கத்தில் எழுதினார். பிறகு 'சரிநிகரில'; இவ்வாறு சில கவிதைகள் வந்ததாக ஞாபகமுண்டு.<br /><br />எஸ்போஸின் படைப்புலகம் தீவிர நிலையிலானதென்று சொன்னேனல்லவா. அதைவிடத்தீவிரமானது அவருடைய உரையாடல். சண்டையிடுவது போலவேதான் பேசுவார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அந்தக் கீச்சுக்குரல் அவருடைய சக்தியை மீறியொலிக்கும்.<br /><br />அவருடன் பேசிக்கொண்டிருந்த பல நாட்களில் அவருடைய கைகள் நடுங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஆகலும் அவர் தீவிர உணர்ச்சிவசப்படுகின்ற போது அமைதியாகிவிடுவார். ஆனாலும் ஒரு அரை மணித்தியாலம் அல்லது பத்து பதினைந்து நிமிடத்தின் பிறகு மீண்டும் விவாதத்தை ஆரம்பித்து விடுவார். பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதனூடாக பல விசயங்களைப்பகிர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடமுண்டு. அதுவும் எப்பொழுதும் எதிர்நிலையில் நின்றே விவதிக்கும் ஒரு வகைப்போக்குடையவர்.<br /><br />"நீர் முன்பொருதடவை பேசும்போது வேறு விதமாக அல்லவா இந்த விசயத்தைச் சொன்னீர். இப்ப அதுக்கு நேரெதிராகக் கதைக்கிறீரே" என்றால்,<br /><br />"அதை யார் மறுத்தது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்க வேணுமா, அப்படி எதிர்பார்ப்பது ஒரு வகை அதிகாரம்" என்பார். "இப்போது இதுதான் என்னுடைய வாதம்" என்று சொல்வார். ஆனால் அதையிட்டு சற்று வருத்தமோ, தயக்கமோ அவருக்கிருக்காது.<br /><br />எதிர் நிலையில் நின்று விவாதிப்பதன்மூலம் பல விசயங்களை வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதற்காக அவர் மற்றவர்களைச் சீண்டிக்கொண்டேயிருப்பார். இதனால் அவர் பலருடன் மோத வேண்டியிருந்தது. பலர் எஸ்போஸை விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் கடுமையாக மோதிக்கொண்டு வெளியேறிப்போன அவர் பிறகொரு நாள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சண்டையிட்டவரின் முன்னால் வந்து நிற்பார். எனவே அவருடன் யாரும் நிரந்தரமாகப் பகைக்க முடியாது. கோபத்தையும் அவரே உருவாக்குவார், பிறகு அதை அவரே துடைத்தழிப்பார். இதனால் அவருடன் பலர் கோவித்துக் கொண்டார்களே தவிர பகைக்க முடியவில்லை.<br /><br />அவருடன் இனிமேல் விவாதிப்பதில்லை என்று நீங்கள் தீர்மான மெடுக்கமுடியாது. நீங்கள் மிகப்பிடிவாதமாக உங்களுடைய தீர்மானத்தில் நிற்கலாம். ஆனால், எதிர்பாராத ஒரு புள்ளியில் வைத்து உங்களை அவர் விவாதத்தில் இழுத்து விடுவார். மனதில் பகைமையோ தீமையோ இல்லை என்பதால் அவரை நிரந்தரமாக யாரும் நிராகரித்ததில்லை.<br /><br />எஸ்போஸின் எழுத்துகளில் மிகத்தீவிரமானவை அவருடைய கவிதைகளே. அவை மிகப்புதியவை. அப்படித்தான் அவற்றைச்சொல்ல வேண்டும். நவீன தமிழ்க்கவிதை வெளிப்பாட்டில் எஸ்போஸ் அளவுக்கு மொழியையும் சொல்முறையையும் பொருளையும் இணைத்து நேர்த்தியாக கவிதையை எழுதியவர்கள் வேறெவரும் இல்லை எனலாம். அவருடைய கவிதைகள் மிகக்கவர்ச்சியானவை. மிக ஆழமானவை: மிக நேர்த்தியானவை.<br /><br />மொழியை அதன் உச்சமான சாத்தியப்பாடுகளில்வைத்து படைப்புக்குப்பயன் படுத்தியவர் எஸ்போஸ். அவர் கவிதையை உணர்முறைக்குரிய படைப்பென்றே கருதினார். சொல்முறையிலான கவிதையை அவர் முற்றாக நிராகரித்தார். இதனால் அவர் பலருடனும் நேரடியாக மோதவேண்டியேற்பட்டது. ஆனால் அவருக்கு அதையிட்டு வருத்தமெல்லாம்; கிடையாது. அப்படியொரு மாற்று வெளியிருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான வெளியிருந்தால் புதிய கவிதைக்கான இடத்தை அது மறைத்து விடும் என்று நம்பினார்.<br /><br />புதிய கவிதையை நாம் வீரியமாகவும் புதுமையாகவும் எழுதுவோம.; அதன்மூலம் அதற்கான வெளியை உருவாக்க முடியும் என சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த மென் வழிமுறையை அவர் பின்பற்றத்தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பலருடனும் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். சொல்முறையிலான கவிதையை நிராகரிக்கும் நோக்கம் அவருக்குள் அந்தளவுக்கு ஆழமாக வேரோடியிருந்தது.<br /><br />சொல்முறையிலான கவிதை வாசகனை அதிகம் பலவீனப்படுத்துகிறது. அதில் ஜாலங்களே அதிகம். மொழியின் அலங்காரங்களை நம்பியே அது கட்டியெழுப்பப்படுகிறது. ஒற்றைப்படைத்தன்மையும் சீரழிவும் அதற்குள் தாராளமாக நிரம்பிக்கிடக்கின்றன என்ற எண்ணங்கள் சொல்முறையிலான கவிதை குறித்து அவரிடம் இருந்தன. தீவிரத்தன்மையை நோக்கி வாசகரை அழைத்துச்செலல்லும் வலிமை சொல்முறைக் கவிதைக்கில்லை. அதனால் அவை வாசகருக்கெதிரான அதிகார மையத்தைக் கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார். சொல்லல் கேட்டல், சொல்லல் ஏற்றுக்கொள்ளல் முறையில் ஒருவகை அதிகாரம் இருக்கிறது என்று நாம் பேசியதை வைத்துக்கொண்டு தன்னுடைய இந்தத்தீவிர நிலைப்பாட்டைக் கட்டியெழுப்பியிருந்தார்.<br /><br />உணர் முறைக் கவிதைகளில்; அதிகம் வாசகன் மதிக்கப்படுகிறான். வாசகனுடைய அறிவை விரிவாக்கம் செய்யும் ஆழமான நம்பிக்கையைக்கொண்டே அந்தக்கவிதை உருவாகிறது. பன்முக வெளிகளில் வாசகன் பயணம் செய்யக்கூடிய சுதந்திரமும் வழிகளும் அந்தக்கவிதைகளில் நிரம்பக்கிடைக்கின்றன. உணர்தலினூடாக நிர்மாணிக்கபபடும் பேருலகத்தை, பகிரும் வழிமுறையை ஏன் யாரும் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டார்.<br /><br />அவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய கவிதைகள் பரந்தளவிலான கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது.<br /><br />அவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந்தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும்.<br /><br />இதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். "பார்க்கலாம் " என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே.<br /><br />'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கமும் சலிப்புமடைந்திருந்தார் எஸ்போஸ். அது அவருடைய திட்டத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்து, சாதாரண இதழாகவே வந்தது. யேசுராசா இளங்கவிஞர்களுக்காக நடத்திய 'கவிதை ' இதழையும் விட நிலம் மேலெழும்ப வில்லையே என்று சில நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர் மதித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் 'உயிர்நிழல் ' என்ற பெயரில் புதிய இதழைப்பற்றி யோசித்தது.<br /><br />அதிகாரத்துக்கெதிரான சிந்தனைதான் எஸ்போஸின் அடையாளம். எந்தப்போராட்டமும் தன்னை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். சாதியோ, நிறமோ, வர்க்கமோ, மதமோ எதுவாயினும். கைது, சித்திரவதை, கொலை, சிறை எல்லாமே அச்சத்தின் வெளிப்பாடுகள்தான். எஸ்போஸின் எழுத்துகளின் ஆதாரம் இந்த மையத்தில் இருந்துதான் வேர்கொண்டெழுகிறது.<br /><br />ஒருதடவை கைதியின் நிலை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு கைது, சிறை, சித்திரவதை அனுபவங்கள் நிறையவுண்டு. அப்போது எங்களுடன் மயன்2 என்ற சு.மகேந்திரனும் இருந்தார். மகேந்திரன்; யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வெலிக்கந்தவில் வைத்துப்படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் இரண்டரை வருசங்கள் சிறையிருந்தவர். இன்றுவரையில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று அவருக்குத்தெரியாது. கைதுக்கான காரணத்தை அவரைப்பிடித்தவர்களும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு ஆசிரியர். இலங்கை இந்திய ஒப்பந்தம் வரவில்லையென்றால் தான் இன்னும் நீண்டகாலம் சிறையிலேதான் இருந்திருக்க வேண்டுமோ என்று சொன்னார்.<br /><br />அன்று கைது, தண்டனை, சிறை, படுகொலை பற்றியே அதிகமும் பேசினோம். ஒரு கட்டத்தில் கைது செய்யப்படுவோனிடமா அல்லது கைது செய்வோனிடமா அதிகாரமிருக்கிறது என்ற கேள்வி பிறந்தது. இது நடந்து ஆறு அல்லது ஏழமாதத்துக்குப்பிறகு 'சித்திரவதைக்குப்பின்னான வாக்குமூலம் ' என்ற கவிதையை எஸ்போஸ் மிகத்தரமாக எழுதியிருந்தார். அது சரிநிகரில் பிறகு வெளிவந்தது.<br /><br />விவாதிப்பவற்றை, உரையாடலை படைப்பாக்குவதில்; அசாதாரண திறமை எஸ்போஸ_க்கு உண்டு. எங்களுக்கிடையே நிகழ்ந்த பல விவாதங்களையும் பேச்சுகளையும் அவர் நல்லமுறையில் பலவிதமாக எழுதியிருக்கிறார்.<br /><br />எஸ்போஸின் படைப்பியக்கம் ஒடுக்குமுறைக்கெதிரானது. அதன் வழியான அதிகாரத்துக்கு எதிரானது. அவர் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளியாமல் தன்னை வைத்துக்கொண்டார். அதனால் அவர் துருத்திக்கொண்டிருப்பதாகவே பலருக்கும் தெரிந்தார். அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான படைப்பியக்கத்தில் அவரால் தீவிரமாகவும் ஆழமாகவும் ஈடுபடமுடிந்தது. இந்தமையத்தைச்சுற்றியே அவர் தொடர்ந்து தன்னுடைய படைப்பியக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.<br /><br />எஸ்போஸ_க்குத்தெரியும், தான் என்றோ ஒரு நாள் கைது செய்யப்படுவேன், சித்திரவதைக்குள்ளாவேன் அல்லது சுட்டுக்கொல்லப்படுவேன் என்று. அவர் அதைப்பற்றி முன்னுணர்ந்து எழுதியிருக்கிறார். 'விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக்குறிப்பு' 'சிலுவைச்சரித்திரம்' என்ற கவிதைகள் உட்பட பலகவிதைகள் இவ்வாறுள்ளன.<br /><br />'சிறகுகள், குருதியொழுகும்; சிறகுகள்<br />ஆணிகள், குருதியொழுகும் ஆணிகள் …<br /><br />எனது அடையாளம்<br />நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது …'<br /><br />' அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா<br />அதிகாரத்திற்கெதிரான நமது இருதயங்களைச்<br />சிலுவையிலறைவதா '<br /><br />எஸ்போஸ் விடுதலைக்காப்போராடுவோரைக் குறித்திருந்தார். அதுதான் அவருடைய அடையாளம். அந்த வாழ்வின்போதுதான் அவர் சிலுவையிலறையப்பட்டார். அவர் முன்னரே எழுதியிருந்ததைப்போல, தனக்கான சிலுவை காத்திருக்கிறது என்று அவர் நம்பியதைப்போல அவருக்குச் சிலுவை பரிசளிக்கப்பட்டிருக்கிறது.<br /><br />எஸ்போஸ் இளமையிலே தன்னுடைய தந்தையை இழந்ததைப்போல அவருடைய பிள்ளைகளும் இளமையிலேயே தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அவருடைய தாய் தன்னுடைய துணையை இழந்ததைப்போல அவருடைய மனைவி தன் துணையை இழந்திருக்கிறார். நாங்கள் மகத்தானதொரு கவிஞனை இழந்திருக்கிறோம். அபூர்வமானதொரு மனிதனை இழந்திருக்கிறோம். நல்லதொரு தோழனை இழந்திருக்கிறோம்.<br /><br />அவர் எழுதினார,;<br />' உன்னை அவர்கள் கொல்வார்கள்<br />நிச்சயமாக நீயே அதை உணர்வாய்<br />அப்பரிசு<br />நிச்சயமற்ற உனது காலத்தில்<br />எப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. '<br /><br />இதுதான் நடந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது.<br /><br />அன்றிரவு ஒரு மெல்லிய மனிதனைக்கொல்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அவனுடைய வீட்டைத்தேடிப்போனார்கள். ஒரு நிராயுதபாணியைக் கொல்வதற்காக துப்பாக்கிகளைக்கொண்டு போனார்கள். எஸ்போஸ் ஒரு கவிதையில் எழுதியதைப்போல ' நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு வருகிறாய் ' என அவர்கள் அந்த ஒட்டி உலர்ந்த மனிதனிடம் போனார்கள். அவனுடைய குழந்தையின் முன்னாலேயே அந்த மனிதனைப் பலியிட்டார்கள். ஒருபாவமும் செய்யாத அந்த மனிதன் குருதிதெறிக்க புரண்டுகிடந்தான் அகாலமாக.<br /><br />சிலுவையில் இன்னொரு மனிதன். ஜீசஸ், உம்மைப்போல மெலிந்த மனிதன். உம்மைப்போலவே தாடிவைத்திருந்த மனிதன். உம்மைப்போலவே சனங்களைப்பற்றிச்சிந்தித்த மனிதன்.<br /><br />அந்த இரவில்; அவர்கள் அந்த மனிதனைச் சுட்டுக்கொன்றார்கள்.<br /><br />-------------------------------------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-28525481583130676272008-06-19T01:59:00.000-07:002008-06-19T02:48:34.268-07:00மரணத்தோடு விளையாடிய குழந்தை<span style="font-size:130%;color:#ff0000;"><strong>தீபச்செல்வன் </strong></span><br />----------------------------------------------<br /><br />உனது ஒளி மிகுந்த கவிதைகளிடம்<br />அவர்கள் முழுமையாக<br />தோற்றுப்போனார்கள்<br />இருளை கொடடூர முகத்தில்<br />அப்பிக்கொண்ட அவர்கள்<br />வலிமை மிகுந்த<br />உனது குரலிடம்<br />சரணடைந்து போனார்கள்.<br /><br />விழித்துக்கிடந்த<br />உனது சுதந்திரத்தின்<br />குழந்தைமீது<br />கூரிய கத்தியை வைத்து<br />குரலை நசித்துவிட்டு<br />சிரித்தபடி போகிறார்கள்.<br /><br />நீ சுமந்துவந்த<br />தேன் நிரம்பிய மண்பாணை<br />உடைந்து போனதாய்<br />அவர்களுக்குள்<br />திருப்தி தலை தூக்க<br />வீதியை இருட்டாக்ககி<br />ஓடிக்காண்டிருக்கிறார்கள்.<br /><br />இருப்பினும் உனது<br />எல்லா கவிதைகளும்<br />விழிகளில்<br />சூரியனை கொண்டு<br />பிரகாசிக்கின்றன<br />உனது எண்ணங்கள்<br />கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.<br /><br />நீ வாழ்ந்து வந்த<br />சோலைகளின் மீதும்<br />அவர்களின் கத்திகள் பதிந்தன<br />நீ வளர்த்த மரங்களின்மீதும்<br />அவர்களின் துப்பாக்கிகள்<br />பதிந்தன<br />உன்ன தூக்கிக்கொண்டு<br />கருகிய வனம் ஒன்றிறிகுள்<br />போகச்சொன்னார்கள்.<br /><br /><br />நீ கொண்டாடிய சிரிப்ப பலியெடுக்க<br />பின் தொடர்ந்து வந்தார்கள்<br />நீ எதிர்த்த பயங்கரத்த<br />உன் மீதே<br />பிரயோகிக்க திரிந்தார்கள்.<br /><br />எப்போழுதும் போலவே<br />உனது வானம்<br />உனது நிறத்த அணிந்திருக்கிறது<br />எப்போழுதும் போலவே<br />உனது வழி உனது வெளிச்சத்தில்<br />மிகுந்திருக்கிறது<br />இன்னும்<br />உனது வார்த்தைகள்<br />உனது இசையால் நிறைந்நிருக்கின்றன<br />உனது கேள்வியும் போராட்டமும்<br />அதிகாரங்களுக்கு முன்னால்<br />முண்டியடிக்கிறது.<br /><br />ஒரு குழந்தையை<br />படுக்கையின் மீது<br />படுகொலை செய்து விட்டு<br />எப்பொழுதும் விடுதலைக்காய்<br />அதிகாரத்தை எதிர்த்து<br />குரலிடும்<br />அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை<br />எடுத்துப்போகிறார்கள்.<br />_____________________________________________<br />இதில் போஸ் நெருங்கிக்கையாலும் சில சொற்களும் இடங்களும் வருகின்றன.<br />தீபம் : ஒளியாய் கசிகிறது எழுத்து.<br />_____________________________________________நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-11817444505693166692008-06-19T01:58:00.001-07:002008-06-19T02:48:53.204-07:00சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின் குரல்<strong><span style="font-size:130%;color:#ff0000;">சித்தாந்தன்</span></strong><br />---------------------------------------------------------------<br /><br />இலைகளையிழந்த வனத்தின் புதிர்ப்பாதைகளிலும்<br />சுவடுகளை உறிஞ்சும் பெரும் பாலையிலுமாக<br />பயணிக்க நேரிட்டது.<br /><br />கழுதைகளை விடவும் அதிகம் சுமக்கப்பழகிவிட்டோம்<br />அல்லது அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்<br />நண்ப,<br />துப்பாக்கிச் சன்னங்கள் அலையும் தெருக்களில்<br />கத்திகளாய்முளைத்திருக்கும் பார்வைகளுக்குமிடையிலும்<br />நீ பேசிக்கொண்டிருந்தாய்<br />கைதுகளை<br />சித்திரவதைகளை<br />காலத்திற்கும் அகாலத்திற்குமிடையில்<br />ஒளி அவிந்து உருகும் வாழ்வை<br />சலனமற்ற இரவுகள்<br />நாய்களின் ஊளையால் நடுங்குவதை<br />தெருவின் கடைசிப்பயணியாய்<br />வீடு திரும்புதலின் நிச்சயமின்மையை<br /><br />உன்னை சிலந்தி வலையில்<br />சிக்கித் தவிக்கும் ப+ச்சியாய் உணர்ந்தபோதும்<br />பாறையின் வேர்ஆழத்துள்ளிருந்து<br />உனது சொற்களை உருவாக்கினாய்<br /><br />வன்முறையையையும் அதிகாரத்தையும்<br />கடைசிவரையிலும் எதிர்த்துக்கொண்டேயிருந்தாய்<br />நண்பனே<br />உனது பயணத்தின் சாட்சியாய் நீயே இருந்தாய்<br />உனது கவிதைகளின் அர்த்தமாய் நீயே இருந்தாய்<br />கடைசியில்<br />எரியும் காலத்தின் புகை உன்மீது படிந்தது<br />அவர்கள் வன்முறையின் உச்சக்குரலில் பேசினார்கள்<br />நீயோ<br />அதிகாரத்தின் குருதி முகத்தில் காறி உமிழ்ந்தாய்<br />முடிவில் உன்னைக் கொன்றார்கள்<br /><br />ஓரு பறவையின் குரலை இழந்த துயரம்<br />எங்களில் படிந்து போனது<br />நீ அற்பமான காலத்தின் மகா கவிஞன்<br />அப்படித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்<br />நண்ப,<br />உன் சொற்களுக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் பெருநதியில்<br />வாழ்வின் துர்க்கனவுகளுடன் கவிதைகள் மிதக்கின்றன.<br /><br />---------------------------------------------------------------------<br /><br /><br />00குறிப்பு: சந்திரபோஸ் சுதாகர்<br /><br />எஸ்போஸ், போஸ் நிஹாலே என அறியப்பட்ட 90 களின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராவார். 16.04.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் அவரின் மகனின் முன்னாலேயே வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-59511201787113270262008-06-19T01:42:00.000-07:002008-06-19T02:45:44.257-07:00சூரியனை கவர்ந்து சென்ற மிருகம்<span style="font-size:130%;color:#009900;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்</strong></span><br />-----------------------------------<br /><br />என் அன்புக்கினிய தோழர்களே<br />எனது காதலியிடம் சொல்லுங்கள்<br />ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த<br />வனாந்தரத்திலிருந்து<br />ஒரு மிருகம் என்ன இழுத்துச்சென்றுவிட்டது<br />கடைசியாக நான் அவழுக்கு முத்தமிடவில்லை<br />அவளது கண்களின் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை<br />கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது<br />கடைசிவரை நட்சத்திரங்களையோ புறாக்களையோ<br />எதிர்பார்த்த அவளுக்கு சொல்லுங்கள்<br />எனது காலத்திலும் எனது காலமாயிருந்த<br />அவளது காலத்திலும் நான் அவற்றை காணவில்லை<br />என்ன ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.<br /><br />நான்.<br />இனிமேல்<br />எனது சித்திரவதை காலங்களை<br />அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது<br />எனவே தோழர்களே<br />நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது<br />மண்டையினுள் குருதிக்கசிவாலோ<br />இரத்தம் கக்கியோ<br />சூரியன் வெளிவா அஞ்சிய ஒருகாலத்தில்<br />நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.<br /><br />நம்பிக்கயைற்ற இந்த வார்த்தைகள்<br />நான் அவளுக்கு பரிசளிப்பது<br />இதுவே முதற்தடவை எனினும் அவளிடம் சொல்லுங்கள்<br />அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டர்கள்<br />மூளைய நசுக்கிவிட்டார்கள்<br />என்னால் காற்றை உணரமுடியவில்லலை.<br />_________________________________________நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2676021594454021543.post-52779813194006082032008-06-17T03:01:00.000-07:002008-06-19T02:45:19.150-07:00கனவுகளின் அழுகையொலி.<span style="font-size:130%;color:#ff6600;"><strong>எஸ்போஸ்:கவிதைகள்<br /></strong></span>___________________________________<br /><br />மரணம் தூங்கும் சுவர்களில்<br />இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறது<br />காலப்பேய்நிழல்.<br /><br />அந்தரத்தில் உதிர்ந்து போகும் சிறகுகள் பற்றிய துயரத்தை<br />இடிபாடுகளுக்கு மேலாக பாடிப்போகின்றன பறவைகள்<br />நாட்செல்ல நாட்செல்ல<br />மரங்களில் எழுதப்பட்ட அவற்றின் வாழ்வு<br />சாம்பல் பூத்து சாம்பல் பூத்து நிழலழிந்து போகிறது.<br /><br />பறவைகள் கலைந்து போகின்றன கூடுகளைவிட்டு<br /><br />பிணமெரிந்த புகையாய் நிலமெங்கும் படர்கிறது<br />காலப்போய்நிழல்.<br />நந்தவனங்களுக்கு மேலாய் பறந்துபோகின்றன வெளவால்கள்<br />கனிகளை புசித்து புசித்து<br />சாபத்தின் சிறகுகளை பறவைகளின் சிறகுகளில் வீசிச்செல்கின்றன<br />வெறுமையும் சாவின் அமைதியும் மிகப்பழைய கூடுகளில் உறைகிறது<br />அதே துயரம்<br />அதே வலிகள்.<br /><br />பறவைகள் வாழ்ந்த கொடிகளில்<br />வனப்பும் வாசமும்<br />நள்ளிராக்கருகாமையில் வழி தவறிப்போயிற்று.<br /><br />இருள் தந்த மகிழ்ச்சியின் வெறியில்<br />ஆடைகளை அவிழ்த்துதெறிந்து நிர்வாணிகளாயின வெளவால்கள்.<br /><br />அழியுண்ட கனவுகுகளின் அழுகைச் சகதிக்குள் போய்விழுகிறது<br />சிறகிழந்த பறவைகளின் வாழ்வு.<br />----------------------------------------நிலம்http://www.blogger.com/profile/02853090876675964277noreply@blogger.com0